Health and computer

penguin animated gifs

Monday 8 November 2010

கணணி பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

கணணி பயன்படுத்துவோரின் கவனத்திற்கு



















அனைத்து அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாகி  வருகின்றன. பேப்பர் இல்லாத அலுவலகம்
 உருவாகி வாடிக்கையாளர்களை சொக்க
 வைக்கின்றன. சரி, இந்த அலுவலகத்தில்
 பணியாற்றுபவர்கள் எப்படி உணர்கிறார்கள்.
 ஆரம்பத்தில் எல்லாமே சுகமாகத்தான் இருக்கிறது.
 டேபிள் நிறைய குப்பையாய் பைல்கள் இல்லை.
 ஒன்றைத் தேட வேண்டும் என்றால் தூசியைத்
 தட்டி எடுத்து பலமுறை தும்மல் போட்டு
 உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
 ஜம் என்ற ஏ.சி.; சுகமான குளிர், சுத்தமான டேபிள்,
 சேர் என எல்லாம் மயக்குகின்றன. ஆனால்
 நாளடைவில் ஒரு சோர்வு தொற்றிக் கொள்கிறது.


காலையில் ஏ.சி. அலுவலகத்தில் நுழைந்து கீ
 போர்டையும் மவுஸையும் மாற்றி மாற்றி
 இயக்கிவிட்டு மாலையில் வெளியே வருகையில்
 கை மணிக்கட்டில் சிறிது வலி, கண்களில்
 கொஞ்சூண்டு எரிச்சல், முதுகுப் பக்கம் ஏதோ
 இனம் தெரியாத சிறிய நம நமப்பு. இது எல்லாம்
 அல்லது ஒன்றிரண்டு உங்கள் உடம்பில்
 தெரிகிறதா? ஆம், இதுதான் நாம் கம்ப்யூட்டர்
 மயமாக்கலில் வேலை பார்ப்பதால் பெற்றுள்ள
 பக்க விளைவு என்று கூறலாம்.
இவற்றை எப்படி சமாளிக்கலாம்? இந்த  விளைவுகளை எப்படி விரட்டலாம் என்று
 பார்க்கலாம். திறமையுடனும் சிறப்பாகவும்
 பணியாற்றுவதற்கு மட்டுமின்றி பக்க விளைவுகள்
 இல்லாமல் இருக்கவும் நாம் பல விஷயங்களைக்
 கண்ட்ரோல் செய்திட வேண்டியுள்ளது. அவை
– கம்ப்யூட்டர் மற்றும் அதன் துணை சாதனங்கள்,
 நாம் அமரும் நாற்காலி, விளக்கு ஒளி, சத்தம்,
 சீதோஷ்ண நிலை மற்றும் நம்முடைய பழக்க
 வழக்கம்.

உங்கள் கம்ப்யூட்டர் : முதலில் நாம் கட்டாயம்  கவனம் செலுத்த வேண்டிய இடம் நம்
 கம்ப்யூட்டரின் மானிட்டர்  ( அது சி.ஆர்.டி. அல்லது
 எல்.சி.டி. என எது வேண்டுமானாலும்)  அது உங்கள்
 முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக
 இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக
 உங்கள் தலையை சிறிது தூக்க
 வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன்
 ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல்
 புறத்தில் வலி உண்டாகும்.
இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த
 வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே
 இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும்
 நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள்
 கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18
 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர்
 திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ
 இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால்  அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில்
 இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள்
 பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே
 அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு
 உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக்
 கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில்
 எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று
 குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை,
 பயன்படுத்தாததை நீக்கலாம்;
அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம்.
 ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப் படும்
 ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல்
 உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில்
 நீங்கள் பயன்படுத் தும் கலர் ஸ்கீம் மிக
 முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
 பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப்
 பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை
 அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி
 எழுத்துவகையினையும் உறுத்தாத வகையில்
 அமைக்கவும். அடுத்ததாக உங்கள் மவுஸ். எளிதில்
 அதனை அடைந்து கைகளுக்கு வலி
 எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க
 வேண்டும்.உடம்பைச் சாய்க்காமல் அதனை
 சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக
 இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு
 வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில்
 வைப்பதனை அறவே தவிர்க்கவும். உங்கள் கீ
 போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்
 கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல்
 தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில்
 உங்களுடைய மணிக் கட்டு நேராக இருக்க
 வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில்
 வளைந்திருக்க வேண்டும். இது உங்கள்
 நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட
 வேண்டும். அடுத்ததாக அமரும் நாற்காலி:
 உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும்
 வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும்.
 இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி
 ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன்
 மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க
 வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க
 வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம்
 அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி
 நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து
 கால்களில் இருக்க வேண்டும்.

ஒளி அமைப்பு: இருக்கின்ற விளக்கு ஒளி போதும்
 என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக் கூடாது.
 முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும்.
 விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு
 மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள்
 பின்னாலிருந்து ஒளி வரக் கூடாது. உங்கள்
 மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி
 வரும்வகையில் அமைக்கக் கூடாது. பொதுவாக
 நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை
 மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை
 மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம்.
 அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி
 கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம்.
 ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர்
 ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும்
 அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக
 ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது
 இன்னும் நன்றாக இருக்கும்.

சத்தம்: பலருக்கு சத்தங்களுக்கிடையில்
 பணியாற்றுவது பெரிய பிரச்னையாகவும்
 இடையூறாகவும் இருக்கும். சரியான ஒலி
 உற்சாகத்தைக் கொடுக்கும். மிதமான மெல்லிய
 ஓசையுடன் கூடிய பாடல்; இசைக் கருவிகளிலிருந்து
 கிடைக்கும் இனிமையான ஒலி என்பவை
 இவற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இது
 பெரும்பாலும் தனி நபர் விருப்பமாகவே இருக்கும்.


சீதோஷ்ண நிலை: ஏர் கண்டிஷனிங் இருக்கிறதோ
 இல்லையோ கம்ப்யூட்டர் பயன் படுத்தத் தொடங்கிய
 சிறிது நேரத்தில் உங்களுக்கு வியர்க்கத்
 தொடங்கினால் அதைப் போன்ற ஒரு மோசமான
 சூழ்நிலை எதுவும் இல்லை. மோசம் என்பது
 உங்களுக்கு மட்டுமல்ல; கம்ப்யூட்டருக்கும் தான்.
 எனவே சீதோஷ்ண நிலை சற்று குளிர்ச்சியாக
 இருக்கலாம். ஆனால் குளிர் அதிகமான நிலை
 இருக்கக் கூடாது. நேரடியாக காற்று மேலே அடிப்பது
 போல இருக்கக் கூடாது. இது உடல்நலத்திற்குக் கேடு
 மட்டுமின்றி வேலை செய்வதற்கு இடையூறாகவும்
 இருக்கும்.


அடுத்து நீங்கள்: மொத்தத்தில் அதிக முக்கியத்துவம்
 தரப்பட வேண்டியது உங்களுக்குத் தான். நேராக
 நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து
 மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக
 அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது
 மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக
 அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள்.
 உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப்
 பண் பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே
 போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள்
 கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  இறுதியாக  நீங்கள் வேலை வேலை என்று
 அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா?
 அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில்
 தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து
 எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து
 நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால்
 உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.


உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது. மாறிவரும் வாழ்க்கைச்
 சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற
 முடியாது. ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத்
 தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ்
 நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம்
 செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும்
 கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண்
 தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக்
 கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க
 முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன்
 செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க
 முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை
 விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை
 தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில்
 பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து
 வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே
 காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை
 எதிர்பாகிறேன்.

கருணாகரன்.
 

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive